உள்ளூர் செய்திகள்

கொத்தடிமை தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண்

கொத்தடிமை தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

மதுரை

குழந்தை தொழிலாளரை பணி அமர்த்துவது, வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது, தொழிலாளரை கொத்தடிமையாக நடத்துவது ஆகியவை சட்டப்படி குற்றம். தமிழகத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க ஏற்கனவே 1800 4252 650 தொலைபேசிஎண் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கட்டணமில்லா தொலைபேசிஎண்: 155214 உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.