உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 34. சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுச் சென்றனர்.

இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT