கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம்

கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது. மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் நகராட்சி முன்பு மதுரை சாலையில் தெற்கு மாவட்ட செய லாளர் மணிமாறன் தலைமையில் மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் திமுக அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லதா அதியமான், முத்துராமலிங்கம், சாமி நாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பாச பிரபு மதன்குமார், விமல், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்க பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், கப்பலூர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT