திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் ஒன்றிய செய லாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செய லாளர் பாலமுருகன், ராஜ்குமார், நாகரத்தினம், மாணவரணி பகுதி செய லாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.