மதுரை
அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (56). மாற்றுத்திறனாளி. நேற்று மதியம் இவர் ஏணிப்படியில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.