உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் வளையாம் பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

SCROLL FOR NEXT