கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமை யிலான தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியை அடுத்த பெரிய எலந்தம்பட்டு அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.