பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவில் அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 46). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்கவாதம் ஏற்பட்டு இடது கால் மற்றும் கை செயல் இழந்து காணப்பட்டது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி சுப்புலெட்சுமி தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.