புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

முத்தையா விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

4-ம் கால யாகபூஜைகள் நடைபெற்று யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்றது.மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள முத்தையா விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், லெட்சுமி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகபூஜைகள் நடைபெற்று யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்பு, மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT