உள்ளூர் செய்திகள்

பாலத்தில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

ஓசூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியானார்.

ஓசூர்:

திருவண்ணாமலை மாவட் டம், ஆரணி அருகே பூசுமலை குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது40). இவர், ஓசூர் பாரதிதாசன் நகரில் தங்கி யிருந்து, பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று,  ஓசூர் -தளி சாலையில்  ஆர்.சி. சர்ச் அருகேயுள்ள பாலத்தில் மதுபோதையில் தவறி விழுந் தார். பின்னர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்ட அவர் பின்ன மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்து குமாரின் மனைவி சித்ரா, ஓசூர் டவுன் போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.