கரூர்:
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாந்தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த 24ந் தேதி தேர்த் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கருட சேவை, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நாளை காலை தேர்த்திருவிழா நடக்க இருக்கிறது. அதனை தொடர்ந்து தெப்பத்தேர் உற்சவம், வெள்ளி கருடசேவை, வெங்கடரமண சுவாமி கோவிலில் பல்லாக்கு, ஊஞ்சல் உற்சவம் மற்றும் புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.