உள்ளூர் செய்திகள்

கரூரில் சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

கரூரில் சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலியானார்இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கரூர்:

கரூர் ராயனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தெய்வமணி (வயது 56). இவர் தனது வீட்டில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில் தீப்பற்றி படுக யமடைந்தார். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத் துவமனையில், சேர்க்கப்பட்ட தெய்வமணி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.