உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம்

மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற போது சம்பவம் மோட்டார் சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

கரூர்,

கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கு பட்டி காலனியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 32). இவர் தனது தாயார் வளர்மதியுடன் (52) மோட்டார் சைக்கிளில் தோகைமலை- மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்னம்பட்டியை சேர்ந்த தீபன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்யராஜ், வளர்மதி ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."