கரூர்:
கரூர் மாவட்டம் தோகைமலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர், கூடலுார் ராக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44). என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.