உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது

கரூர்

குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT