கரூர்:
கோவையில் கராத்தே தமிழ்நாடு சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் குணா கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரியின் முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பாராட்டினர்.