உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் ஏட்டு சஸ்பெண்டு

முறைகேடு புகார்கள் எதிரொலிபோலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

மாலை மலர்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால் (வயது 39).

இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக போலீஸ் ஏட்டு கோபால் மீது பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இது தொடர்பாக விசா ரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். அதன்படி ஏட்டு கோபால் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.

இதில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். ஏட்டு கோபால் மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு விவகாரம் குமரி மாவட்ட போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.