கோப்பு காட்சி 
உள்ளூர் செய்திகள்

கருங்கல் அருகே மீனவர் தற்கொலை

கருங்கல் அருகே மீனவர் தற்கொலை

மாலை மலர்

கன்னியாகுமரி, மே.28-

கருங்கல் அருகே உள்ள மிடாலம் 10-வது அன்பித்தை சேர்ந்தவர் பங்கிராஸ்  (வயது57),மீனவர்.கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர்,  மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். 

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பங்கிராஸ் நைலான் கயிறால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் ஆனந்த் கொடுத்த  புகாரின்பேரில்  கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.