இரணியல் :
இரணியல் அருகே வில்லுக்குறி மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பேட்ரிக் (வயது 51). இவர் வீட்டருகில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது. அடுத்த நாள் அதைவிட கொஞ்சம் பெரிதாகவும், அடுத்த நாள் அதைவிட பெரிதாகவும் இருந்துள்ளது.
4-வது நாள் கிடந்த முட்டை, கோழி முட்டை அளவில் இருந்துள்ளது. 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.