நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டபோது எடுத்த படம்  
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் திருப்பூர் குமரன், லால்பதூர் சாஸ்திரி நினைவு நாள்

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்:

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கோசல்ராம், கவிதா ராமமூர்த்தி. செல்வம், ஜான்சி, ரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT