கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகள் உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்கக்கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சி யினர் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த் தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட கனரக லாரியை போலீ சார் பறிமுதல் செய்து நடவ டிக்கை மேற்கொண் டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேக ரிக்கப்பட்டிருக்கிறது. அவரி டம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.