கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும் அருகில் சென்று அவர்களிடம் கைகுலுக்கி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
ஆணழகன் போட்டியை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்.