கோவில்பட்டி:
வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பால் நுகர்வோர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.