தேர் நிலை கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிலை கூடம்

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தனது சொந்த பொறுப்பில் இதை அமைத்து கொடுக்க உள்ளார்.

இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேர்மன் விஜய்கண்ணன், கோவில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.