புயல், மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும் சென்னை சென்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
மழை பாதித்த இடங்கள், நிவாரண பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.