உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி மனைவியை கடித்த கணவர் - போலீசார் வலைவீச்சு

செல்வமுருகன் ,முத்துகாளி 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கோவைக்கு சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த செல்வமுருகன் தனது மனைவியை தாக்கி கடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 24). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துகாளி (22) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கோவைக்கு சென்று அங்குள்ள கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது முத்துமாரி கர்ப்பமாக உள்ளார். பின்னர் அங்கேயே குடியிருந்த நிலையில் திடீரென செல்வமுருகன் மாயமானார். தகவல் அறிந்த முத்துமாரியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது சொந்த ஊருக்கு அழைத்து வந்து போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் செல்வமுருகனை தேடி கண்டுபிடித்து 2 பேரையும் சேர்ந்து வாழ வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த செல்வமுருகன் தனது மனைவியை தாக்கி கடித்து வைத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வ முருகனை தேடி வருகின்றனர்.