உள்ளூர் செய்திகள்

வெங்காடம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடையம்:

கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி, அம்பிகா , சரஸ்வதி, விஜயா, ரேகா, பற்றாளர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், வேளாண் துறை அதிகாரி, பொறியியல் துறை உதவி பொறியாளர், கால்நடை மருத்துவர் , வெங்காடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT