உள்ளூர் செய்திகள்

அரசு, தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்

பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சரயுவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகளில் கழிப்பறை வசதிகளும், தண்ணீர் வசதிகளும் இல்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும். மேலும் அதிக மாணவ, மாணவிகள் உள்ள பள்ளிகளில் கூடுதல் கழிப்பிட கட்டிடங்கள் கட்டிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.