நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் முதல் ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
இதற்காக பஸ் ஸ்டாப்பு களை திலகம் பெட்ரோல் பங்க் அருகிலும், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அதன் எதிர் பகுதியிலும் நிறுத்தி இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முறையான அறிவிப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், சிக்கலான பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது
மக்கள் தவித்து வரு கின்ற னர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறி வித்தது போல தற்போது மாற்றப்பட்டுள்ள பஸ் ஸ்டாப் இடத்தில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மேலும் பஸ்களை நடுரோட்டில் நிறுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்து உள்ளனர்.