தருமபுரி,
சென்னை டி.நகர் அடுத்த கண்ணம்மாபேட்டை சித்திவிநாயகா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மாரியப்பன் (வயது29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளன.
மேலும் இவர் மீது தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரையின் பேரில் திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.