ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி போலீசார் அன்னை சத்யாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள முட்புதரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மருது(27) என்பவரை கைது செய்தனர்.
கம்பம் வடக்கு போலீசார் கோம்பை ரோடு பகுதியில் ேராந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ராஜா(40) என்பவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.