தேனி:
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி விழா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மரக்கடை பாண்டி, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரசாத், மனோஜ் உள்பட விழா கமிட்டியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து தேனியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வடபுதுப்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.