சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.
தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர்.