உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை காலத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழை காலம் துவங்க இருப்பதால் கபிலர்மலை வட்டார விவசாயிகள் நெல் ரகங்களை பயிரிட்டு பலன் அடையலாம்.மேலும் விபரங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி விவசாயிகள் பயன்பெறலாம்.

பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காலம் துவங்க இருப்பதால் கபிலர்மலை வட்டார விவசாயிகள் ஏடிடி 38, ஏடிடி 39, ஏடிடி 46, கோ 50, கோ 52, டிகேஎம்13, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, டிஆர்ஒய் 3 போன்ற நெல் ரகங்களை பயிரிட்டு பலன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் களையோ அல்லது கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.