உள்ளூர் செய்திகள்

சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

ஈரோடு, 

மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா ராயர்பாளையம் சாலைக்காடு பகுதியில் வரப்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த தம்பி (எ) கருப்புசாமி (39) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில், சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.