கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

வீட்டில் தீ பிடித்து 27 மூட்டை பருத்தி, கடலை, தீவனங்கள் எரிந்து சேதம்

பெருந்துறைஅருகே சமையல் செய்த போது வீட்டில் தீ பிடித்து 27 மூட்டை பருத்தி, கடலை, தீவனங்கள் எரிந்து சேதமானது.

மாலை மலர்

பெந்துறை:

பெருந்துறைஅருகே  சமையல் செய்த போது வீட்டில்  தீ பிடித்து 27 மூட்டை பருத்தி, கடலை, தீவனங்கள் எரிந்து சேதமானது.

பெருந்துறை அடுத்த திங்களூர் கருக்குபாளையம் ஆவாரங்காடு  பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது வீடு சிமெண்ட் சீட்டாலானது. 

நேற்று இரவு 9மணியளவில் தனலட்சுமி தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குடிசையில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென தீப் பொறி குடிசையில் பட்டு தீ மளமளவென எரிய தொடங்கியது. 

தொடர்ந்து வீடு முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்த 

பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் தீ பிடித்ததில் வீடு முற்றிலுமாக எரிந்தது. 

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 20 மூட்டை பருத்தி, 2 மூட்டை கடலை, 5 மூட்டை மாட்டு தீவனங்கள், மின் மோட்டார் மற்றும் ரு.5 ஆயிரம் பணம் ஆகியவை எரிந்து சேதமானது. 

இந்த தீ விபத்து குறித்து போலீசாரும் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.