உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

மாலை மலர்

கோபி:

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி செட்டிபாளையம் என்ற ஊரில் பவானி ஆற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென அந்தியூர்-கோபி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

இதுப்பற்றி தெரியவந்ததும் கோபிசெட்டி பாளையம் இன்ஸ்பெக்டர் அ.சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.