ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சூரம்பட்டி பாரதிபுரம் யுவராஜ் (வயது 37), என்பவரை போலீசார் கைது செய்தனர். மூலப்பாளையம் பழனி குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.
மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.