ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் கமாராஜ் நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சிறுவலூர் போலீசார் அங்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கொளப்பலூர் காமராஜ் நகரை சேர்ந்த சோளை (41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.