உள்ளூர் செய்திகள்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்

வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர்.அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

ஈரோடு:

காதலர் தினத்தை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் பார்க் மற்றும் சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதையடுத்து இளம் காதலர்கள் சிலர் ஊஞ்சல் விளையாடி மகி ழ்ந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல காதலர்கள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பொதுமக்க ளும் ஏராளமானோர் தின மும் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

மேலும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களும் பலர் வந்து அணைைய சுற்றி பார்த்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் காதலர் தினத்தை யொட்டி இன்று காலை முதலே காதலர்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கோபிசெட்டி பாளையம் மற்றும் கொடி வேரி அணை பகுதியில் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண் காணித்து வருகிறார்கள்.

இதே போல் காதலர் தினத்தை யொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்கா வுக்கு இன்று ஏராளமான காதல் ஜோடியினர் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

மேலும் புதிதாக திருமண மான இளம் ஜோடியினர் பலரும் பூங்காவுக்கு வந்த னர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல பூங்காவில் காதலர்களின் கூட்டம் அலை மோதியது.

தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அணை பூங்காவில் சறுக்கு மற்றும் ஊஞ்சல் விளை யாடியும் மகிழ்ந்தனர்.

இதையடுத்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்துபடி சென்றனர். மேலும் காதலர்கள் பலர் அங்கு கொட்டும் தண்ணீர் அருகே நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

இதை தொடர்ந்து அணை பகுதியில் விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் வாங்கி ருசித்து விட்டு சென்றனர்.

இதனால் பவானிசாகர் அணை பகுதி முழுவதும் இைளஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஜோடி, ஜோடி யாக வலம் வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.