உள்ளூர் செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.

மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.