உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகி சாலை விபத்தில் பலி

முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

சென்னிமலை:

சென்னிமலை யூனியன், 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் சசிகலா (36). இவர் சென்னிமலை மண்டல பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுச்செயளாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் சகிகலாவுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வசித்து அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார் கார்மெட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஈங்கூர் மெயின் ரோட்டில் ஈங்கூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனக்கு முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.

அப்போது தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

இது குறித்து சசிகலா அண்ணன் ஜோசப் ராஜப்பா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.