உள்ளூர் செய்திகள்

மது-கஞ்சா விற்ற 3 பேர் கைது

நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர். கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது பவானி புது பஸ் ஸ்டாண்டு, பவானி ஆற்று பகுதி அருகே அனும தியின்றி மது விற்றுக்கொண்டிருந்த பவானி சொக்காரம்மன் காடு பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் வெற்றிவேல் (வயது 37), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (40) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அந்தியூர் போலீசார் அந்தியூர்-பவானி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அந்தியூர் காமராஜர் சாலையை சேர்ந்த பூவாணன் மகன் செல்வன் (63) என்பதும், அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.