உள்ளூர் செய்திகள்

கந்து வட்டி கொடுமையில் தீ குளிக்க முயன்ற வாலிபர்

குமார் தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜேகே நகரை சேர்த்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார்(36). தனது மனைவி மங்கம்மாள் மற்றும் தனது மகன், மகளுடன் வந்தார். அப்போது திடீரென குமார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி சென்று அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்து உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.இது குறித்து குமார் கூறும் போது-

நான் அரச்சலூர் ஜெ.ஜெ.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரிடம் தனித்தனியாக கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய பணத்திற்காக மாதம் வட்டியும் கட்டி வந்தேன்.

ஆனால் நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து எனது வீட்டையும் விற்று பணத்தை கொடுத்தேன். அப்போதும் அவர்கள் 4 பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்த னர். நாளுக்கு நாள் அவ ர்கள் தொந்தரவு அதிகரித்த தால் என்னால் வியாபா ரமும் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.