தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது73). இவர் கொளகத்தூரில் உள்ள ஆசைதம்பியின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.