கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மா வட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி எலவனாசூர்கோட்டை போலீஸ் சராகத்துக்குட்பட்ட விநாயகா பள்ளி எதிரில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள வேட்டி அணிந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகிறனர்.