சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராகவேந்திர சுவாமிகள். 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஏகாதசி வழிபாடு

ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்தம், அட்சதை கற்கண்டு துளசிகள் மற்றும் புஷ்பங்கள் வழங்கப்பட்டது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடவா ற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தா வனத்தில் இன்று ஆனி மாதம் கடைசி வியாழக்கிழமை மற்றும் ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் ,அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.

பக்தர்களுக்கு தீர்த்தம், மிருத்திகை,அட்சதை கற்கண்டு துளசிகள் மற்றும் புஷ்பங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.