மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புகழஞ்சலி செய்தியில்,
காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும், கருணை நிறைந்த மெய் அன்பாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும், மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை போற்றி வணங்குகிறேன்.
எனக் குறிப்பிட்டுள்ளார்.