எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். சிலை சேதம் 
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டடர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி  எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.