கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து சீராகாததால் சுருளி, கும்பக்கரை அருவியில் தொடரும் தடை

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

இன்று 9-வது நாளாக நீர்வரத்து சீராகவில்லை. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அதிக அளவில் வெள்ள ப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT